தமிழகத்தில் 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு குறித்து திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் ஐ தொழில்நுட்பத்துடன் கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் – கிருஷ்ணகிரியில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி.
கிருஷ்ணகிரியில் வேலூர் மண்டல அளவிலான திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. வேலூர் மண்டலத்துக்குட்பட்ட கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அணியின் தொழில்நுட்ப நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் திமுக தொழில்நுட்ப அணி செயலாளரும், தமிழக தொழில்துறை அமைச்சருமான டி.ஆர். பி.ராஜா மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டு வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற தொண்டர்கள் தொழில்நுட்ப அணி இளைஞர்கள் ஐயராமல் பாடுபட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். பின்னர் செய்தியாளிடம் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா..
திமுக தகவல் தொழில்நுட்ப அணி மண்டல கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. அதன் படி வேலூர் மண்டல அளவிலான கூட்டம் இன்று நடந்தது. வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற கடுமையாக பாடுபட வேண்டும் என அறிவுரை வழங்க உள்ளோம்.
தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தையும் செயல்படுத்த எனது தலைமையில், தலைமைச் செயலாளர் மற்றும் அனைத்து துறை செயலாளர்கள் இணைந்து ஒருங்கிணைப்புக் குழுவை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார். இந்த குழு ஒப்பந்தங்களை முதலீடுகளாக மாற்ற தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி வருகிறோம் ஒப்பந்தங்கள் அனைத்தும் முதலீடுகளாக மாற்ற 70% பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
முதலமைச்சர் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்று பெறப்பட்ட ஒப்பந்தங்களும் 100% முதலீடுகளாக வரும் என்கிற சூழல் உள்ளது. தமிழகத்தில் உள்ள 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த திறன் பயிற்சி அளிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் மூலம் ஏ ஐ டெக்னாலஜி மூலம் பயிற்சி வழங்க நேற்று அமெரிக்காவில் போடப்பட்ட ஒப்பந்தம் கிடைத்துள்ளது.
போர்டு நிறுவனம் மீண்டும் சென்னையில் பணிகள் துவங்கும் பணி நடைபெற்று வருகிறது, அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும். திமுக ஆட்சியில் தான் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஏராளமான தொழிற்சாலைகள் இன்னும் அதிக தொழிற்சாலைகள் வரவுள்ளது என தெரிவித்தார்.