Homeசெய்திகள்தமிழ்நாடுஉஷார் ! வாகன ஓட்டிகளே … ஸ்டிக்கர்களை அகற்றாவிட்டால் இன்று முதல் அபராதம் - எவ்வளவு...

உஷார் ! வாகன ஓட்டிகளே … ஸ்டிக்கர்களை அகற்றாவிட்டால் இன்று முதல் அபராதம் – எவ்வளவு தெரியுமா?

-

- Advertisement -

 

மே 2-ம் தேதி முதல் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போக்குவரத்து போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

இன்று முதல் சென்னையில் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை, வாகனங்களில் தங்களது துறை சார்ந்த ஸ்டிக்கர்கள் ஒட்டி இருந்தால் அபராதம் விதிக்கும் நடைமுறை, அமலுக்கு வந்துள்ளது.

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை, ஸ்டிக்கர்களை அகற்ற உத்தரவு.

நம்பர் பிளேட்டில் எந்த வித சின்னங்களோ, துறையின் அடையாளங்களோ, பெயரோ எழுதக் கூடாது.

உஷார் ! வாகன ஓட்டிகளே … ஸ்டிக்கர்களை அகற்றாவிட்டால் இன்று முதல் அபராதம் - எவ்வளவு தெரியுமா?

ஊடகத்தில் பணியாற்றுபவரின் பெயரில் வாகனம் இருந்தால், அவர் அந்த வண்டியில் ’ஊடகம்’ என்னும் ஸ்டிக்கரை ஒட்டிக்கொள்ளலாம்.

PRESS, Police, Doctor, EB என துறைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை தனிநபர்கள் தங்கள் வாகனங்களில் ஒட்ட சென்னை போலீஸார் தடை விதித்தனர். வாகனங்களில் இதுபோன்ற குறியீடுகள் இடம் பெற்றிருந்தால், அவற்றை  மே 1ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் மே 2-ஆம் தேதி முதல் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்தது.

மே 2-ம் தேதி முதல் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போக்குவரத்து போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

அறிவிப்பின்படி, வாகனங்களில் ஊடகம், காவல்துறை, நீதித்துறை, வழக்கறிஞர், மருத்துவர் என அங்கீகாரமற்ற வகையில் ஸ்டிக்கர் ஒட்டுவதை கட்டுப்படுத்தும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தின் பிரிவு 198 மற்றும் மத்திய மோட்டார் வாகன சட்டம் விதி 50-ன் கீழ் வரும். மே 2-ம் தேதி முதல் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போக்குவரத்து போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அபராதம் அனைத்து துறையினருக்கும் பொருந்தும். அதன்படி  விதியினை மீறு பவர்களுக்கு முதல்முறை ரூ. 500 அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை ரூ. 1500 அபராதமாக வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 2-ம் தேதி முதல் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போக்குவரத்து போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

விதிமீறிவோர் மீது ,மோட்டார் வாகன சட்டம் 1988-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  பிரிவு 198-ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகனத்தில்

அங்கீகரிக்கப்படாத குறியீடு போன்றவைக்கு பிரிவு 198 கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். வாகன எண் தகட்டில் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்கள் ஏதேனும் பயன்படுத்தினால் அவர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டிக்கர்களை அகற்றுவது தொடர்பான அறிவிப்பில் பல்வேறு முரண்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த அறிவிப்பைத் திரும்பப்பெற வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளன. மேலும் சென்னை பத்திரிகையாளர் மன்றமும் இந்த அறிவிப்புக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில்,  நம்பர் பிளேட்டில் எந்த வித சின்னங்களோ, துறையின் அடையாளங்களோ, பெயரோ எழுதக் கூடாது. அரசு அங்கீகரித்த எழுத்துக்களோடு எண்கள் மட்டுமே இடம் பெற்று இருக்கவேண்டும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

ஊடகத்தில் பணியாற்றுபவரின் பெயரில் வாகனம் இருந்தால், அவர் அந்த வண்டியில் ’ஊடகம்’ என்னும் ஸ்டிக்கரை ஒட்டிக்கொள்ளலாம். ஆனால் வாகனம் வேறொரு பெயரில் இருந்து அதனை பயன்படுத்தி ஸ்டிக்கர் ஒட்டியிருந்தாலோ, உறவினர்கள் யாராவது ஊடகம் ஸ்டிக்கர் ஒட்டி வாகனத்தை பயன்படுத்தி வந்தாலோ, கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும் என்று விளக்கமளித்துள்ளது.

MUST READ