Homeசெய்திகள்தமிழ்நாடுமுதலமைச்சரைச் சந்திக்க நேரம் கேட்டு அண்ணாமலை கடிதம்!

முதலமைச்சரைச் சந்திக்க நேரம் கேட்டு அண்ணாமலை கடிதம்!

-

 

"குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு....."- அண்ணாமலை ட்வீட்!
Photo: Annamalai

பா.ஜ.க.வின் ஐந்து பேர் கொண்டக் குழு, தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினைச் சந்திக்க நேரம் ஒதுக்கக் கோரி அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர்களுடன் விஜய் இன்று ஆலோசனை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில், மது இல்லாத தமிழகத்தை உருவாக்குவது தொடர்பான திட்டத்தை பா.ஜ.க. உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதனை சமர்ப்பிக்க, மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் ஐந்து பேர் முதலமைச்சரைச் சந்திக்க நேரம் ஒதுக்கக் கோரி, அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார். நடப்பு ஜூலை மாதத்தில் ஏதாவது ஒருநாளை சந்திப்பதற்கு ஒதுக்கித் தருமாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சண்டைப் பயிற்சியாளரும், இந்து முன்னணி நிர்வாகியுமான கனல் கண்ணன் கைது!

தமிழகத்தில் தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே கருத்து மோதல் அதிகரித்துள்ள நிலையில், முதலமைச்சரைச் சந்திக்க நேரம் கேட்டு அண்ணாமலை எழுதிய கடிதம், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ