பாரீஸ் பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் தமிழக வீராங்கனை நித்யஸ்ரீ சிவன் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார்.
17வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் பேட்மிண்டன் எஸ்எச்6 பிரிவில் நடைபெற்ற வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை நித்யஸ்ரீ சிவன், இந்தோனேசியாவின் ரினா மர்லினா உடன் மோதினர்.
இந்த போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நித்யஸ்ரீ சிவன் 21-14, 21-6 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று, வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார். முன்னதாக பேட்மிண்டன் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த துளசிமதி முருகேசன், மனிஷ◌ா ராமதாஸ் ஆகியோர் பதக்கம் வென்றனர். பாரா ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கம், 5 வெள்ளி உள்பட 15 பதக்கங்களுடன், இந்தியா 15வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.