Homeசெய்திகள்தமிழ்நாடுஉத்தரபிரதேச பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 4 பேர் பலி, 6 பேர் படுகாயம்

உத்தரபிரதேச பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – 4 பேர் பலி, 6 பேர் படுகாயம்

-

உத்தரபிரதேச மாநிலத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர், 6 பே ர் படுகாயமடைந்தனர்.

உத்தரபிரதேச மாநிலம பெரோசாபாத் மாவட்டம் நவ்ஷெரா பகுதியில் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பட்டாசு ஆலை குடோன் மற்றும் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. நேற்றிரவு இந்த ஆலையில் தொழீலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் கட்டிடத்தின் முன்பகுதி முற்றிலும் இடிந்து சேதம் அடைந்தது இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிகொணடனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புபடையினர் மற்றும் ஷிகோகாபாத் காவல்துறையினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த வெடி விபத்தில் 3 வயது சிறுமி, ஒரு பெண் உள்பட 4 பே ர் பலியாகினர். 6 பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

MUST READ