Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

-

- Advertisement -

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்று மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, இன்று காலை 5.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மேலும் 8.30 மணி அளவில் அதே பகுதியில், விசாகபட்டினத்திற்கு கிழக்கே 120 கி.மீ தொலைவிலும், கலிங்கபட்டினத்திற்கு தெற்கு – தென்கிழக்கே 80 கி.மீ தொலைவிலும், கோபால்பூருக்கு தெற்கு- தென்மேற்காக 180 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மேலும், வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, விசாகப்பட்டினம்- கோபால்பூர் இடையே கலிங்கபட்டினத்திற்கு அருகில் இன்று நள்ளிரவு கரையை கடக்க கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று முதல் செப்டம்பர் 2ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வடதமிழகத்தில் வலுவான தரைக்காற்று 30 – 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் கூறப்பட்டு உள்ளது. இதேபோல் செப்டம்பர் 3 முதல் 6ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. சென்னை நகரில் அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

MUST READ