Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை மற்றும் புறநகரில் வெளுத்து வாங்கும் கனமழை!

சென்னை மற்றும் புறநகரில் வெளுத்து வாங்கும் கனமழை!

-

 

சென்னை மற்றும் புறநகரில் வெளுத்து வாங்கும் கனமழை!
Video Crop Image

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் ஆறாக ஓடியது.

விஜயகாந்த் உடல்நிலை அறிந்து கவலையடைந்தேன் – ராகுல் காந்தி..

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதலே விட்டுவிட்டு மழை பெய்தது. மாலையில் திடீரென இடியுடன் கூடிய மழை பெய்ததால், அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோர் மிகுந்த அவதியடைந்தனர்.

கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி, ஆலந்தூர், மடிப்பாக்கம், நங்கநல்லூர், சைதாப்பேட்டை, எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, விருகம்பாக்கம், கோயம்பேடு, முகப்பேர் உள்ளிட்ட இடங்களில் பெய்து வரும் கனமழையால், முக்கிய சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது.

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை..

இதன் காரணமாக, வாகனங்கள் மழைநீரில் தத்தளித்தபடி செல்கின்றனர். இதுதவிர, தாம்பரம் குரோம்பேட்டை பல்லாவரம், மீனம்பாக்கம், குன்றத்தூர், திருவேற்காடு, பூந்தமல்லி, ஆவடி உள்ளிட்ட சென்னையின் புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது. குறுகிய நேரத்தில் பல சென்டிமீட்டர் மழை கொட்டியது.

MUST READ