Homeசெய்திகள்தமிழ்நாடுகருணை அடிப்படையில் 103 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கருணை அடிப்படையில் 103 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

 

கருணை அடிப்படையில் 103 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Photo: TN GOVT

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 22) சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 103 பணியாளர்களின் வாரிசுத்தாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் காலில் விழுந்து ஆசிப் பெற்ற பப்புவா நியூ கினி பிரதமர்!

தொழில்நுட்ப உதவியாளராக 24 பேருக்கும், இளநிலை உதவியாளராக 2 பேருக்கும், மின் கணக்கீட்டாளராக 14 பேருக்கும், தட்டச்சராக ஒருவருக்கும், களப்பணி உதவியாளராக 56 பேருக்கும், உதவி வரைவாளராக ஒருவருக்கும், காவலாளியாக 5 பேருக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

டொக் பிசின் மொழியில் திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி!

இந்த நிகழ்ச்சியில், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., எரிசக்தித்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா இ.ஆ.ப., கூடுதல் தலைமைச் செயலாளர்/ தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி இ.ஆ.ப., சிவலிங்கராஜன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

MUST READ