- Advertisement -
கோவை உக்கடம் அருகே டிப்பர் லாரி மோதி தனியார் பள்ளி ஆசிரியை பலியானர்.
கோவை டவுன்ஹால் பகுதியை சேர்ந்தவர் அனிதா. இவர் குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் இன்று காலை பள்ளிக்குச் செல்ல தனது இரு சக்கர வாகனத்தில் வந்தார். அப்போது கோவை உக்கடம் தனியார் பெட்ரோல் பங்க் அருகே வந்த போது டிப்பர் லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆவடி: 1.5 வயது பெண் குழந்தை பலி (apcnewstamil.com)
இச்சம்பவம் குறித்து உக்கடம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.