Homeசெய்திகள்தமிழ்நாடு”சூப்பர் 8” சுற்று - தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று...

”சூப்பர் 8” சுற்று – தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சு!

-

- Advertisement -

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ”சூப்பர் 8” சுற்று ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் உலக கோப்பை டி20 தொடர் கடந்த 2-ந் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் மோத உள்ளன. இந்த சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள்‘சூப்பர் 8’ சுற்றில் பலப்பரீட்சை நடத்த வேண்டும். அதன் பிறகு ஜூன் 24ம் தேதி அரையிறுதி ஆட்டங்களும், ஜூன் 29ம் தேதி பிரிட்ஜ்டவுனில் பைனலும் நடக்க உள்ளன.

இந்நிலையில் இன்று நடைபெறும் ’சூப்பர் 8’ சுற்றில் 45வது லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. தென்னாப்பிரிக்கா அணி ஏய்டன் மார்க்ராம் தலைமையிலும் இங்கிலாந்து அணியானது ஜாஸ் பட்லர் தலைமையிலும் களம் காண்கின்றன. இந்த ஆட்டமானது வெஸ்ட் இண்டீஸ் உள்ள டேரன் சம்மி மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்குகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணி முதலாவது பேட்டிங் விளையாடி வருகிறது. தற்போது வரை அணியானது 5.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 54 ரன்கள் எடுத்துள்ளது.

 

 

 

MUST READ