Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிமுகவிற்கு யார் துரோகம் செய்தாலும் ஓபிஎஸ் நிலைதான் - ஈபிஎஸ்..

அதிமுகவிற்கு யார் துரோகம் செய்தாலும் ஓபிஎஸ் நிலைதான் – ஈபிஎஸ்..

-

 சசிகலா
அதிமுகவிற்கு யார் துரோகம் செய்தாலும் அவர்களுக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைதான் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு அதிமுக ஆட்சியில் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டன. குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை. குறுவை விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கள்ளச்சாராயத்தை இரும்புக்கரம் கொண்டு ஒழிக்க வேண்டும். காவிரி விவகாரத்தில் மத்திய அமைச்சர் நடுநிலைமையோடு நடுநிலைமையோடு நடந்துகொள்ள வேண்டும். மேகதாதுவில் அணைக்கட்ட வேண்டுமென்ற ஒருவரையே மத்திய நீர்வளத்துறை இணையமைச்சராக்கியுள்ளனர். நீட்தேர்வு ரத்து குறித்து தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். 40 எம்.பிக்களும் சேர்ந்து நாடாளுமன்றத்தில் வலியுறுத்த வேண்டும். ” என்று தெரிவித்தார்.

sasikala, eps, ops

மேலும், அதிமுகவை காப்பாற்ற தான் களமிறங்க போவதாக சசிகலா அறிவித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஈபிஎஸ், இதுவரை அதிமுகவை காப்பாற்றியது யார் என்று சசிகலாவிற்கு கேள்வியெழுப்பினார். மேலும் பேசிய அவர், “அதிமுகவில் ஒரு சாதி ஆதிக்கம் செலுத்துவதாக சசிகலா எப்படி சொல்கிறார். அதிமுகவில் எல்லா சாதியினரும், அனைத்து பொறுப்புகளிலும் உள்ளனர். அதிமுகவில் எந்த சரிவும் இல்லை. தோல்வியை சந்திக்காத அரசியல் கட்சி எது? 3 ஆண்டுகள் விடுமுறையில் சென்றிருந்தார். இப்போது ரீ எண்ட்ரி என்கிறார்.

2021ல் அரசியல் ஓய்வு என கூறிய சசிகலா இப்போது ஏன் வருகிறார்? இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்ட ஓபிஎஸ்ஸை எப்படி கட்சியில் சேர்க்க முடியும். அதிமுகவிற்கு எப்போதும் விசுவாசம் இல்லாத நபர் ஓபிஎஸ், மத்திய அமைச்சராகலாம் என்கிற சுயநலத்தில் பாஜகவில் இணைந்து போட்டியிட்டவர் அவர். அதிமுகவிற்கு யார் துரோகம் செய்தாலும் ஓபிஎஸ் நிலைமை தான் ஏற்படும்.” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

MUST READ