தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்கு கோப்புள் திருடப்பட்ட விவகாரம் குறித்து விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசு சார்பில் பிராமண பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி வழக்கை ஒத்திவைத்துள்ளது.
தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்கு விசாரணை கோப்புகள் திருடப்பட்ட விவகாரம் குறித்து சிறப்பு புனாய்வு அமைக்கக்கோரி பா.ஜ.க வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு உள்துறை செயலாளர் காணொளி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜரானர்.
இதனையடுத்து தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சபரீஷ் சுப்பிரமணியன், சிலை திருட்டு வழக்கு சம்மந்தப்பட்ட கோப்புகள் காணாமல் போன விவகாரத்தில் இரண்டாவது FIR பதியப்பட்டுள்ளதாகவும், உரிய விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க தமிழ்நாடு உள்துறை செயலாளர் காணொளி மூலம் ஆஜராகியுள்ளதாகவும் கூறினார்.
அப்போது நீதிபதிகள், இரண்டாவது FIR தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதை ஏற்க முடியாது, முதலில் சிலை கடத்தல் கோப்பு காணமல் போனது தொடர்பாக சம்மந்தப்பட்ட துறை செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யட்டும் அதனை பார்த்த பின்னர், இந்த வழக்கில் தமிழக அரசின் தவறை சரி செய்ய முயற்சிக்கிறோம் என கூறியதோடு, பிராமண பத்திரம் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கினர்.
அதேவேளையில், இந்த வழக்கின் மனுதரரான யானை ராஜேந்திரன் ஆஜராகி, வழக்கில் முன்பு ஆஜராகிய வழக்கறிஞர் தற்போது வாதிட இயலாததால் வழக்கில் வேறு ஒருவரை நியமிக்கும் வகையில் வக்காலத்து மாற்றம் செய்வதற்காக 4 வாரம் அவகாசம் கோரினார், அந்த கோரிக்கையையும் ஏற்று கால அவகாசம் வழங்கிய நீதிபதிகள், வழக்கை பிப்ரவரி இறுதி வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.
‘ மாசுபடுத்துபவரே இழப்பீடு செலுத்த வேண்டும்’- அன்புமணி ராமதாஸ் வலியுருத்தல்