முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட அவரது நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கமல்ஹாசன், எச். வினோத் கூட்டணியின் ‘KH233’…… தாமதத்திற்கான காரணம் என்ன?
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக கடந்த 1996- ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவுச் செய்திருந்தது. அப்போது, போயஸ் கார்டன் இல்லத்தில் நடந்த சோதனையில் தங்க, வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள், கைக்கடிகாரங்கள் என ஏராளமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெற்றதால் பறிமுதல் செய்யப்பட்ட நகை உள்ளிட்டப் பொருட்கள், அங்குள்ள கருவூலத்தில் வைக்கப்பட்டன. கடந்த 2016- ஆம் ஆண்டு காலமானார். இதற்கிடையே ஜெயலலிதாவின் நகை உள்ளிட்டப் பொருட்களை ஏலம் விட வேண்டும் எனவும், அதன் மூலம் வரும் பணத்தை நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் எனக்கோரி சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி என்பவர் பெங்களூரு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அரசால் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் தனக்கு உரிமை உள்ளதாகக் கூறி அவற்றை தம்மிடம் ஒப்படைக்கக் கோரி, மனுத்தாக்கல் செய்தார். இந்த நிலையில், ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடுவது குறித்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி நகைகளை ஏலம் விடுவதற்கு பதிலாக, தமிழக அரசின் உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
‘அயலான் 2’ படத்தின் அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!
ஆகவே, தமிழக அரசு செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரியை நியமித்து அவர் மூலமாக காவல்துறையினரிடம் இணைந்து நகைகளை சரிபார்த்து பெற்றுக் கொள்ளலாம் எனவும், அவர் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு மாற்றியதற்கான செலவுத் தொகையாக ரூபாய் 5 கோடியை தமிழக அரசு, கர்நாடகாவிற்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.