Homeசெய்திகள்தமிழ்நாடுதொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம் விலை - ஒரு சவரன் 49,000ஐ நெருங்கியது!

தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம் விலை – ஒரு சவரன் 49,000ஐ நெருங்கியது!

-

 

இன்று முதல் HUID நகைகளை மட்டுமே விற்க அனுமதி!சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 48,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த செவ்வாய் கிழமை தங்கம் விலை சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.48,120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6,015க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.48,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

விலை உயர்வு

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 48,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,090க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.78.50க்கும், கிலோவுக்கு 500 ரூபாய் உயர்ந்து ரூ.78,500க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

MUST READ