Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை ஒரே நாளில் இவ்வளவு உயர்வா? - இன்றைய விலை என்ன தெரியுமா?

தங்கம் விலை ஒரே நாளில் இவ்வளவு உயர்வா? – இன்றைய விலை என்ன தெரியுமா?

-

இன்று முதல் HUID நகைகளை மட்டுமே விற்க அனுமதி!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,080க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச பொருளாதார நிலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களாக தினமும் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த திங்கட் கிழமை ஆபரண தங்கத்தின் விலை ஆபரண தங்கத்தின் விலையானது ஒரு சவரன் ரூ.53,480க்கு விற்பனை செய்யப்பட்டது. செவ்வாய்கிழமை ஆபரண தங்கத்தின் விலையானது சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 53,520-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய தங்கம் முந்தைய நாள் விலையில் சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,560-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தமிழகத்தில் உச்சத்தை எட்டி வரும் தங்கம் விலை

இந்த நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,080-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,760-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

MUST READ