Homeசெய்திகள்தமிழ்நாடுபட்டங்களைப் பெறும் மாணவர்களுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்ட பிரதமர்!

பட்டங்களைப் பெறும் மாணவர்களுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்ட பிரதமர்!

-

- Advertisement -

 

பட்டங்களைப் பெறும் மாணவர்களுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்ட பிரதமர்!

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, அரசுமுறைப் பயணமாக திருச்சி வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சிங்கப்பெருமாள் கோவில் அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!

சாலை மார்க்கமாக காரில் சென்ற பிரதமருக்கு வழிநெடுகிலும் பா.ஜ.க.வினர் சிறப்பான வரவேற்பை அளித்தனர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள பாரதிதாசன் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதைச் செலுத்தினார். பட்டங்கள் பெறும் மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ராஜகண்ணப்பன், பல்கலைக்கழக துணைவேந்தர் ஆகியோர் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி அர்ப்பணிக்கும் திட்டங்கள் என்னென்ன?- விரிவான தகவல்!

மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு வாழ்த்துக் கூறினார். அதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொள்ளவிருக்கிறார். பட்டமளிப்பு விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, திருநாவுக்கரசு, அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

MUST READ