பொங்கலோ பொங்கலென பொங்கட்டும்
பொய்மைகளும் புரட்டுகளும் விலகட்டும்
புதுமைகளும் பொறுப்புணர்வுகளும் மலருட்டும்
புரட்சிகர சிந்தனைகள் வளரட்டும்.
மதுமயக்கம் மாநிலத்தில் மடியட்டும்
மாதர்தன் விடுதலையை பேசட்டும்
மதவாதம் அடியோடு ஒழியட்டும்
மானமும் அறிவும் ஆளட்டும்.
சாதிப்பற்று மதப்பற்று அகலட்டும்
மனித சமுதாயப்பற்று மட்டும் சிறக்கட்டும்
கல்வியே செல்வமென்று ஓதட்டும்
கடவுள் கற்பனையென்று அறியட்டும்.
பொங்கலோ பொங்கலென பொங்கட்டும்.
-என்.கே.மூர்த்தி