- Advertisement -
முதியோர் உதவித்தொகை அதிகரிப்பு? அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
முதியோர் மற்றும் கைம்பெண்களுக்கு வழங்கும் உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1200 ஆக உயர்த்த அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இக்கூட்டத்தில் தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க தொழில் நிறுவன விரிவாக்கம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், ஆளுநரின் செயல்பாடு, அமலாக்கத்துறை சோதனை, உலக முதலீட்டாளர்கள் மாநாடு உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் முதியோர் மற்றும் ஆதரவற்ற பெண்கள், கைம்பெண்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை உயர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அவர்களுக்கான உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1200 ஆக உயர்த்த அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.