தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அ.தி.மு.க.வின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம், அ.தி.மு.க.வின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ச.ராமச்சந்திரன் தலைமையில், சென்னை எக்மோர், பாந்தியன் சாலையில் உள்ள அசோகா ஹோட்டலில் வரும் ஜூலை 1- ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையைத் தொடர்ந்து தனியார் பேருந்தை இயக்கும் பெண் ஓட்டுநர்!
இந்த கூட்டத்தில், வரும் 2024- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும், அடுத்தக்கட்ட நகர்வு குறித்தும், மாவட்ட வாரியாக ஆதரவை அதிகரிப்பது, கூட்டணி உள்ளிட்டவைக் குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தண்டவாளத்தில் கற்கள்…ரயிலைக் கவிழ்க்க சதியா?- காவல்துறையினர் விசாரணை!
ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் ஓ.பன்னீர்செல்வம் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.