கொடைக்கானல் பைன் மரக்காடு, தூண் பாறை பகுதிக்கு செல்ல தடை
கொடைக்கானலில் பைன் மரக்காடுகள், தூண் பாறை, குணா குகை பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் பைன் மர சோலை சுற்றுலா தலத்தில் பிரேக் பிடிக்காத காரணத்தினால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதி மோதியதில் அந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தூத்துக்குடியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும் பெண்கள் உட்பட 15- க்கும் மேற்பட்ட நபர்கள் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் விபத்து எதிரொலியாக கொடைக்கானலில் பைன் மரக்காடுகள், தூண் பாறை, குணா குகை பகுதிக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டுப்பாடு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொடைக்கானல் சென்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.