புகழ்பெற்ற குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவண்ணாமலை சாலை விபத்து- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு!
இந்தியாவில் மைசூரு நிகராக குலசேகரப்பட்டினத்திலும் தசரா திருவிழா கொண்டாடப்படும். இன்று (அக்.15) காலை அலங்கரிக்கப்பட்ட யானையில் ஊர்வலகமாகக் கொண்டு வரப்பட்ட கொடிக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதன்படி, கொடியேற்றத்துடன், குலசேகரப்பட்டினத்தின் தசரா திருவிழா தொடங்கியது. இதில், 100- க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு காப்புக்கட்டி தங்களது விரதத்தைத் தொடங்கினர்.
“மீன்பிடி உரிமையை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!
நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக, பல்வேறு வேடமணிந்து பக்தர்கள் ஒவ்வொரு ஊராக ஊர்வலம் சென்றனர். 10 நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் அக்டோபர் 24- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது.