Homeசெய்திகள்தமிழ்நாடுகாதலன் தற்கொலை செய்துகொண்ட விரக்தியில் காதலியும் தற்கொலை

காதலன் தற்கொலை செய்துகொண்ட விரக்தியில் காதலியும் தற்கொலை

-

- Advertisement -

காதலன் தற்கொலை செய்துகொண்ட விரக்தியில் காதலியும் தற்கொலை

சென்னை அருகே காதலன் தற்கொலை செய்துகொண்ட விரக்தியில் காதலியும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

suicide

பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம், கற்பக விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் டில்லி(47), ஆட்டோ ஓட்டி வருகிறார் இவரது மனைவி சாந்தி(42), இவர்களது மகள் நந்தினி(16), பூந்தமல்லியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இன்று இரவு இவரது உறவினர்கள் வீட்டிற்கு வந்து கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்தபோது நந்தினி தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று நந்தினியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் நந்தினி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்து போன நந்தினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆவடியை சேர்ந்த தேவா என்ற மாணவன் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை நந்தினி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

தேவா இறந்து போன தகவல் வந்த நிலையில் நந்தினி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

MUST READ