Homeசெய்திகள்தமிழ்நாடுஅமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி!

அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி!

-

 

அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி!
Photo: ANI

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் 13 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடந்த நிலையில், அமைச்சரின் மகன் அசோக் சிகாமணியில் 2 கார்களில் இருந்த முக்கிய ஆவணங்கள், வீட்டில் இருந்த ஆவணங்கள் ஆகியவற்றை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். அதேபோல், ஆவணங்கள் இருந்த இரண்டு காரையும் அமலாக்கத்துறையின் அலுவலகத்துக்கு எடுத்து வந்தனர்.

சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம் சார்பில் கலை மற்றும் விருதுகள் வழங்கும் விழா

அத்துடன், அமைச்சர் பொன்முடியைப் பலத்த பாதுகாப்புடன் கார் மூலம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து வந்தனர். அதைத் தொடர்ந்து அமைச்சரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நீடிக்கிறது.

தலை முதல் அடி வரை தலைவரு அலப்பறை……ஜெயிலரின் மாஸான ஹுக்கும் பாடல் வெளியானது!

அமைச்சர் பொன்முடியிடம் நடத்தப்படும் விசாரணைக்குப் பின் அடுத்தக் கட்ட நகர்வுகள் இருக்கும். இதனிடையே, அமைச்சரிடம் விசாரணை நடப்பதால் நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

MUST READ