Homeசெய்திகள்தமிழ்நாடுமுன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 2 நாட்கள் போலீஸ் காவல் - கரூர் நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 2 நாட்கள் போலீஸ் காவல் – கரூர் நீதிமன்றம் உத்தரவு

-

- Advertisement -

நிலமோசடி மற்றும் கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு 2 நாட்கள் போலீஸ் காவல் விதித்து கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி போலியாக பத்திரப்பதிவு செய்து உள்ளதாக கூறி, வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்பட ஏழு பேர் மீது பதியப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

கடந்த 5, 7 மற்றும் 11ம் தேதிகளில் சிபிசிஐடி போலீசார் நடத்திய இந்த சோதனையின் போது எம்.ஆர்.விஜயபாஸ்கரின் மனைவி விஜயலட்சுமியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் பலர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இதனைத்தொடர்ந்து 5 வாரங்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான பிரவீன் ஆகியோரை கடந்த 16ம் தேதி சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். அதன்பின்னர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையிலும், பிரவீன் குளித்தலை கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் நிலமோசடி வழக்கு தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி போலீஸார் கரூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். ஆனால் மனுவை விசாரித்த நீதிபதி பரத்குமார், 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்தார். இதனையடுத்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் காந்தி கிராமம் சின்னப்பா நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

MUST READ