Homeசெய்திகள்தமிழ்நாடுசேலம் அருகே அதிமுக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக நிர்வாகி அதிரடி கைது

சேலம் அருகே அதிமுக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக நிர்வாகி அதிரடி கைது

-

சேலம் மாவட்டம் தாதகாபட்டியைச் அருகே அதிமுக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக நிர்வாகி அதிரடி கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம், தாதகாபட்டியை அடுத்த சஞ்சீவி ராயன் பேட்டையைச் சேர்ந்த சண்முகம். இவர் கொண்டலாம்பட்டி மண்டலக் குழு முன்னாள் தலைவரும், மேலும் அதிமுக கழக செயலாளருமாக இருந்துள்ளார். இவர் நேற்றிரவு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கே மறைந்திருந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக் படுகொலை செய்தது. இதில் கொலையாளிகள் அந்தப் பகுதியில் உள்ள தெரு விளக்குகளை துண்டித்தும், அங்குள்ள CCTV கேமராக்களை உடைத்தும், திட்டமிட்டு கொடூரமான முறையில் அவரை படுகொலை செய்தனர்.

இந்நிலையில் அதிமுக பிரமுகர் சண்முகம் கொலை வழக்கில் திமுக நிர்வாகி சதீஷை காவல்துறை கைது செய்தது. 5 தனிப்படை அமைக்கப்பட்டிருந்த நிலையில், திமுக நிர்வாகி சதீஷ் உட்பட 9 பேரை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்திவருகிறது. கஞ்சா விற்பனையில் சதீஷ் ஈடுபட்டுவந்ததாக சண்முகம் போலீசில் புகார் கொடுத்ததால் சதீஷ் சண்முகத்தை கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.

 

 

 

 

MUST READ