Homeசெய்திகள்தமிழ்நாடுநாம் தமிழர் கட்சி விரைவில் உடையும்- தமிழா தமிழா பாண்டியன் கணிப்பு

நாம் தமிழர் கட்சி விரைவில் உடையும்- தமிழா தமிழா பாண்டியன் கணிப்பு

-

நாம் தமிழர் கட்சி விரைவில் உடையும்- தமிழா தமிழா பாண்டியன் கணிப்பு

நாம் தமிழர் கட்சி விரைவில் உடைந்து காணமல் போகும் என்று மூத்த ஊடகவியலாளர் தமிழா தமிழா பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் செல்போன் உரையாடல்கள், பேச்சுகள் வைரலாகி வருகிறது. நாளுக்கு நாள் அந்த கட்சியின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை குறைந்து வருகிறது.

நாம் தமிழர் கட்சி விரைவில் உடையும்- தமிழா தமிழா பாண்டியன் கணிப்பு

இந்த நிலையில் தமிழா தமிழா பாண்டியன் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், பெரியாரின் சிந்தனைவாதி கொளத்தூர் மணி அவர்களால்
திராவிட இயக்க மேடைகளில் அறிமுகப் படுத்தப்பட்டவர் சீமான்..! அவரால் தமிழ் ஈழத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு விடுதலைப் புலி தலைவர் பிரபாகரனுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதி வாங்கி தந்தவர்.

மேலும் பிரபாகரனை சந்திக்க கொளத்தூர் மணியிடம் கெஞ்சி 3 நிமிட அனுமதி பெற்று எடுத்த புகைப்படத்தை வைத்துக் கொண்டு இன்று சீமான் கலர் கலராக ரீல் விடுகிறார் என்று பாண்டியன் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி விரைவில் உடையும்- தமிழா தமிழா பாண்டியன் கணிப்பு

ஈழப் பிரச்சினையால் தனது சினிமா கேரியர் பாதிக்கப்பட்டதாக புலம்பிய சீமான்,
ஆரம்பத்தில், ஈழப் பிரச்சினை குறித்து பொதுக்கூட்டத்தில் பேச மறுத்தவர்.

ஈழப் பிரச்சினை குறித்து ஆரம்பத்தில் பேசமறுத்த சீமான், அது வியாபாரத்தில் போணி ஆகும் என்று தெரிந்ததும் நரம்பு புடைக்க பேச ஆரம்பித்தாகவும், இன்று கோடிகளில் புரள்வதாகவும் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி டைட்டிலை சிவந்தி ஆதித்தனிடம் இருந்து
வாங்கி சீமானிடம் கொடுத்ததே சோ – குருமூர்த்திதான்.
தமிழ்த் தேசியம் RSS இடம் சென்றது இப்படித்தான் என்று விமர்சனம் செய்துள்ளார்.

கார்கில் போர் நினைவு தினம் – தமிழக ஆளுநர் மரியாதை

ம.திமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு சேர்ந்த கூட்டம் நாளைடைவில்
கரைந்துபோனது போல் சீமானுக்கு சேர்ந்து வரும் கூட்டமும் கரைந்து போகும்.
நாம் தமிழர் கட்சியும் உடைந்து சிதறும் என்று தமிழா தமிழா பாண்டியன் பேசியுள்ளார்.

MUST READ