Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் ஐ.எஸ். பயங்கரவாத தலைவர் கைது!

சென்னையில் ஐ.எஸ். பயங்கரவாத தலைவர் கைது!

-

- Advertisement -

 

சென்னையில் ஐ.எஸ். பயங்கரவாத தலைவர் கைது!
Photo: NIA

வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் சென்னையில் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளுரில் குடும்ப அட்டை பெயர் திருத்த முகாம்

கேரளா மாநிலம், திருச்சூர் அடிப்படையிலான ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையது நபில் அகமது, போலி ஆவணங்கள் மூலமாக நேபாள நாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது, சென்னையில் அவரை சுற்றி வளைத்த தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ. அதிகாரிகள், அதிரடியாக கைது செய்தனர்,

அவரை சென்னையில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், ஐ.எஸ். பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டுவது, பயங்கரவாத தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அத்துடன், தமிழகம், கர்நாடகா என மாறி, மாறி தலைமறைவாக ஐ.எஸ். தலைவர் சையது நபில் அகமது இருந்துள்ளார்.

அவரை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தண்ணீரின்றி கருகும் குறுவை பயிர்கள்- வேளாண் அதிகாரிகள் ஆய்வு

ஏற்கனவே, ஈரோடு வனப்பகுதியில் தலைமறைவாக இருந்த ஆசிஃப் என்பவரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ