Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக அரசு குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சாட்டை துரைமுருகன் கைது

தமிழக அரசு குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சாட்டை துரைமுருகன் கைது

-

தமிழக அரசு குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக அபிநயா போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரான சாட்டை துரைமுருகன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் கல்லக்குடி கொண்ட கருணாநிதி சண்டாளன் கருணாநிதி என்ற பாடியும் தமிழக அரசு குறித்து அவதூறாகவும் பேசியுள்ளார். இந்த செயலானது திமுகவினரிடையே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து இது தொடர்பாக திமுக கட்சியை சேர்ந்த சிலர் சாட்டை துரை முருகன் குறித்து திருச்சி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து தென்காசி மாவட்டம் குற்றாலம் வந்த நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரான சாட்டை துரைமுருகனை திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

MUST READ