Homeசெய்திகள்தமிழ்நாடுபாரா ஒலிம்பிக் - வெள்ளி, வெண்கலம் வென்ற தமிழ்நாட்டு வீராங்கனைகள்!

பாரா ஒலிம்பிக் – வெள்ளி, வெண்கலம் வென்ற தமிழ்நாட்டு வீராங்கனைகள்!

-

பாரா ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த துளசிமதி முருகேசன் வெள்ளிப்பதக்கமும், மனிஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கத்தையும் வென்று அசத்தினர்.

thulasimathi

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதன் மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் எஸ்.யு. 5 பிரிவின் இறுதிப்போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த துளசிமதி முருகேசன், சீனாவின் க்யு ஹ்யா யங் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் துளசிமதி முருகேசன் 17-21, 10-21 என்ற நேர் செட் கணக்கில் க்யு ஹ்யா யங்கிடம் தோல்வி அடைந்து, வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.

manisha ramadoss

பேட்மிண்டன் ஒற்றையர் எஸ்.யு. 5 பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த மனிஷா ராமதாஸ், டென்மார்க்கின் கேத்ரின் ரோசன்கிரென் உடன் மோதினார். இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மனிஷா ராமதாஸ் 21-12, 21-8 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப்பதக்கத்தை வென்றார்.

பாரா ஒலிம்பிக் போட்டியில் இதுவரை இந்தியா 2 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

MUST READ