Homeசெய்திகள்தமிழ்நாடு"உணவு, குடிநீர், மின்சாரத்தை உறுதிப்படுத்துக"- அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

“உணவு, குடிநீர், மின்சாரத்தை உறுதிப்படுத்துக”- அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

-

 

"உணவு, குடிநீர், மின்சாரத்தை உறுதிப்படுத்துக"- அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
Photo: TN Govt

உணவு, பால், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இருப்பு வைக்க அதிகாரிகளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

“எங்கிருந்து வந்தது இவ்ளோ தைரியம்.? இதோட நிறுத்திக்கோங்க” – சமுத்திரக்கனி காட்டம்

சென்னையில் மழை பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதில், நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். மக்களுக்கு தேவையான உணவு, பால், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இருப்பு வைத்திட வேண்டும். மின்தடை ஏற்படக்கூடிய இடங்களில் எவ்வித இடையூறுமின்றி உடனே மின் விநியோகம் ஏற்படுத்தி தர வேண்டும் என்று அதிகாரிகளை முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

மனைவி நயன்தாராவுக்கு விலை உயர்ந்த பரிசு… அசரடித்த கணவர் விக்னேஷ் சிவன்..

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் அதிகாரிகள் தொடர்பில் இருக்க வேண்டும்; அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். அனைத்துத்துறை பணியாளர்களும் ஒருங்கிணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அடுத்து வரும் நாட்களில் பெய்யும் மழையால், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் செயல்பட வேண்டும். மழைநீர் தேங்காமல் உடனுக்குடன் அகற்றிட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; ஏற்கனவே மழைநீர் தேங்கிய இடங்களில் மீண்டும் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

MUST READ