Homeசெய்திகள்தமிழ்நாடுராசிபுரம் அருகே சென்று கொண்டிருந்த பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் படுகாயம்!

ராசிபுரம் அருகே சென்று கொண்டிருந்த பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் படுகாயம்!

-

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சென்று கொண்டிருந்த பேருந்தில் இருந்து பெண் ஒருவர் தவறி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தனியார் பேருந்தில் பயணிகள் சென்று கொண்டிருந்தனர். பேருந்தானது காக்காவேரி பகுதி வளைவில் திரும்பிய போது பேருந்தின் முன்படிக்கட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த சாரதா என்ற பெண் எதிர்பாராத விதமாக பேருந்திலிருந்து கீழே தவறி விழுந்துள்ளார் இதனைத்தொடர்ந்து பேருந்தில் இருந்தவர்கள் கூச்சலிடவே , பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து படுகாயங்களுடன் இருந்த சாரதாவை சக பயணிகள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பேருந்தில் நின்று கொண்டிருந்த பெண் நொடி பொழுதில் பேருந்தில் இருந்து தவறி விழுந்த காட்சி இணையத்தில் தற்போது வெளியாகி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ