
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ்.வெங்கிடரமணன் (வயது 92) மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பேருந்தில் இருந்து கீழே விழுந்ததில் 2 கால்கள் முறிந்தன!
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இந்திய ரிசர்வ வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ்.வெங்கிடரமணன் (வயது 92) உடல்நலக்குறைவுக் காரணமாக மறைந்தார் என்றறிந்து வருத்தமடைந்தேன்.
இந்திய ரிசர்வ் வங்கியின் 18ஆவது ஆளுநராகவும், அதற்கு முன்பாக, கடந்த 1985 முதல் 1989- ஆம் ஆண்டு வரையில் ஒன்றிய நிதித்துறைச் செயலாளராகவும், திறம்படப் பணியாற்றி நன்மதிப்பைப் பெற்றவர் வெங்கிடரமணன்.
“11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!
அவரை இழந்து தவிக்கும் அவரது மகளும் முன்னாள் தலைமைச் செயலாளருமான கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.