Homeசெய்திகள்தமிழ்நாடுகல்குவாரி வெடி விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி

கல்குவாரி வெடி விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி

-

கோபிசெட்டிபாளையம் அருகே கல்குவாரியில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டம், வாணிபுத்தூர் உள்வட்டம், புஞ்சைதுறையம்பாளையம் ‘அ’ கிராமத்தில் அனுமதியின்றி  செயல்பட்டு வந்த தனியார் கல்குவாரியில் நேற்று மாலை சுமார்  5.30 மணியளவில் எதிர்பாராத விதமாக நிகழ்ந்த வெடிவிபத்தில் கல்உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கோபிசெட்டிபாளையம் அயலூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம் மாட்டவள்ளியைச் சேர்ந்த அஜீத் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

Dead

மேலும், இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 இலட்சம் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன், என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

MUST READ