Homeசெய்திகள்தமிழ்நாடுபள்ளிச்சீருடை- அண்ணாமலை வலியுறுத்தல்!

பள்ளிச்சீருடை- அண்ணாமலை வலியுறுத்தல்!

-

 

"குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு....."- அண்ணாமலை ட்வீட்!
Photo: Annamalai

பள்ளி மாணவர்களுக்கான சீருடை, காலணி உள்ளிட்டப் பொருட்களை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

உலகின் நீளமான கடல் பாலத்தில் ஒரே நாளில் 10,000 வாகனங்கள் பயணம்!

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பள்ளிகள் திறந்து ஒரு மாதம் கடந்த பிறகும், மாணவர்களுக்கு புத்தகப்பை, காலணிகள் வழங்கப்படவில்லை என நாளேடுகளில் செய்திகள் வெளியாகியுள்ளது. ஒரு சீருடை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதால், அதை நாள்தோறும் அணிய முடியாத நிலைக்கு மாணவர்கள் ஆளாகியுள்ளதாகவும், சில பள்ளிகளில் கொடுக்கப்பட்டுள்ள காலணிகள் மாணவர்களுக்கு பொருந்தும் அளவில் இல்லை என்றும், புகார் எழுந்துள்ளது.

மீண்டும் ஒரு இரயில் விபத்து…பாகிஸ்தானில் இரயில் தடம்புரண்டு 25 பேர் பலி..

நாட்டின் எதிர்காலத் தூண்களான மாணவர்கள் நலனுக்கு நிதி ஒதுக்க தி.மு.க. அரசுக்கு மனம் வரவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ