Homeசெய்திகள்தமிழ்நாடுசெந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

-

 

'செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது செப்.20- ல் தீர்ப்பு வழங்கப்படும்' என அறிவிப்பு!
File Photo

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மிரட்டும் காளிதாஸ், அர்ஜூன் தாஸ்… போர் ட்ரைலர் வெளியீடு…

சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால், கடந்த 2023- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14- ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அமலாக்கத்துறை தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதால் ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்தன நீதிமன்றங்கள்.

எனினும், தொடர்ந்து ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் கீழமை நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணையானது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்று (பிப்.16) மாலையுடன் நிறைவடைய உள்ள நிலையில், புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி காணொளி காட்சி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

தெலுங்கு சினிமாவில் நடிகைகளுக்கு கொடுமை… மனம் திறந்த ராதிகா ஆப்தே…

இதையடுத்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் பிப்ரவரி 20- ஆம் தேதி வரை 14 நாட்களுக்கு நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். செந்தில் பாலாஜிக்கு 21ஆவது முறையாக காவல் நீட்டிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ