Homeசெய்திகள்தமிழ்நாடுநீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி அவசியம் - தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில்

நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி அவசியம் – தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில்

-

- Advertisement -

நீதிபதிகள் நியமனத்தில் சமூக பன்முகத்தன்மை வேண்டும். தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம்  வலியுறுத்தல்.நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி அவசியம் - தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், துணைத் தலைவர் வி கார்த்திகேயன் மற்றும் அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் எஸ். பிரபாகரன் ஆகியோர் சென்னை  உயர்நீதிமன்ற தலைமை  நீதிபதிக்கு அளித்துள்ள கடிதத்தில், தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் 66 நீதிபதிகள் உள்ளதாகவும், ஒட்டுமொத்த நீதிபதி பதவியிடங்களின் எண்ணிக்கை 75 ஆக உள்ளதாக தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்தநிலையில், இந்த ஆண்டு சில  நீதிபதிகள் ஓய்வுபெற உள்ளதாகவும், எனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிக எண்ணிக்கையிலான காலிப்பணியிடங்கள் ஏற்படவுள்ளது, நீதிபதிகள் பதவிக்கான காலியிடங்களை விரைந்து நிரப்பினால் மக்களுக்கு விரைவான மற்றும் தடையற்ற நீதி நிர்வாகத்தை வழங்க முடியும் என தெரிவித்துள்ளனர். எனவே,  தலைமை நீதிபதி மற்றும்  கொலீஜியம் நீதிபதிகள் சிறுபான்மையினர்,பெண்கள் உட்பட சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வழக்கறிஞர்களின் பெயர்களை அவர்களின் தனிப்பட்ட சட்ட அறிவு, நேர்மை, திறமையின்  அடிப்படையில் பரிசீலிக்குமாறு ஒட்டுமொத்த வழக்கறிஞர்கள் சமூதாயத்தின் சார்பாக  கேட்டுக்கொள்வதாகவும்.

சென்னை  உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக பதவிக்கான பெயர்களை  கொலீஜியம் பரிசீலனைக்கு பரிந்துரை செய்யும் போது  நீதித்துறையில்  சமூக பன்முகத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து சமூகத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

நீதித் துறையில் சமூகநீதிக்கு எதிரான போக்கை எதிர்த்து அறவழி ஆர்ப்பாட்டம்! – கி.வீரமணி

MUST READ