Homeசெய்திகள்தமிழ்நாடுநாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

-

நாகை மாவட்டம் செருதூர் மீனவர்களின் படகின் மீது இலங்கை கடற்படை கப்பல் மோதி தாக்குதல் நடத்தியதில்  4 பேர் காயம் அடைந்தனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகேயுள்ள செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த தர்மன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில், அதே பகுதியை சேர்ந்த கார்த்திக், சக்திவேல், தர்மராஜ், சதீஷ் ஆகியோர் நேற்று மதியம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இன்று அதிகாலை கோடியக்கரைக்கு தென் கிழக்கே 15 நாட்டிகல் கடல் மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படை கப்பல் செருதுர் மீனவர்கள் படகின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படகில் சென்ற கார்த்திக், சக்திவேல், தர்மராஜ் மற்றும் சதிஷ் ஆகியோர் காயம் அடைந்த நிலையில், அவர்களை சக மீனவர்கள் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் 600 கிலோ வலை, மீன்பிடி உபகரணங்கள் என 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கடலில் மூழ்கியதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

MUST READ