Homeசெய்திகள்தமிழ்நாடுமதுவை கூடுதல் விலைக்கு விற்றால் சஸ்பெண்ட்

மதுவை கூடுதல் விலைக்கு விற்றால் சஸ்பெண்ட்

-

- Advertisement -

மதுவை கூடுதல் விலைக்கு விற்றால் சஸ்பெண்ட்

டாஸ்மாக் மதுபான கடைகளில் நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ.10 அல்லது அதற்கு மேல் வசூலித்தால் சஸ்பெண்ட் செய்யப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tasmac tamilnadu

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மதுவிற்பனை நடைபெறுவதாக தொடர் புகார்கள் வந்தன. இந்நிலையில் அனைத்து டாஸ்மாக் ஊழியர்களுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மதுபான சில்லறை விற்பனைக்‌ கடைகளில்‌ நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ.10/- மற்றும்‌ அதற்கு மேல்‌ விலை வைத்து மதுபானங்களை விற்பனை செய்கின்ற கடைப்‌ பணியாளர்களின்‌ மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொண்டு தற்காலிக பணியிடை நீக்கம்‌ செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூடுதல் விலைக்கு மதுவை விற்கும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறும் மாவட்ட மேலாளர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

MUST READ