துபாயில் இருந்து கோழிக்கோடு நோக்கி சென்ற விமானம், அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக கோவை விமான நிலையத்தில் தரையிறங்கியது.
துபாயில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கேரள மாநிலம் கோழிக்கோடு நோக்கி இன்று காலை ‘பிளை துபாய்’ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. கோழிக்கோடு விமான நிலையம் சென்றபோது, அங்கு மோசமான வானிலை நிலவியுள்ளது. இதனால், அந்த விமானம் அரை மணி நேரத்துக்கும் மேலாக வானில் வட்டமடிடத்து கொண்டிருந்தது.
பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த விமானம் கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டது. தொடர்ந்து, இன்று காலை 7.45 மணியளவில் கோவையில் விமானம் தரையிறங்கியது. வானிலை சீரான பின்னர் மீண்டும் விமானம் கோழிக்கோடு புறப்பட்டு செல்லும் என விமான நிலைய அதிகாரிகள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.