Homeசெய்திகள்தமிழ்நாடுநீட் தொடர்பாக விஜய் முன்வைத்த கருத்துகளை வரவேற்கிறோம் - திருமாவளவன்

நீட் தொடர்பாக விஜய் முன்வைத்த கருத்துகளை வரவேற்கிறோம் – திருமாவளவன்

-

நீட் தொடர்பாக விஜய் முன்வைத்த கருத்துகளை வரவேற்கிறோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவான்மியூரில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழாவில் பேசிய விஜய் , நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் தமிழ்நாட்டில் கிராமப்புற, பட்டியலினத்தை சேர்ந்த மாணவர்கள் ஏழை எளிய மாணவர்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் ஒரே பாடத்திட்டம், ஒரே தேர்வு என்பது கல்வி கற்கும் நோக்கத்திற்கே எதிரானது. தொடர்ந்து நடந்துவரும் குளறுபடிகளால் நீட் தேர்வு மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். என பேசினார்

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் , எம்.பி.யுமான திருமாவளவன் , நீட் தொடர்பாக விஜய் முன்வைத்த கருத்துகளை வரவேற்கிறோம்; பாராட்டுகிறோம். தமிழ்நாட்டில் பாஜகவை தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளன; அந்த வரிசையில் விஜயும் இணைந்துள்ளார் என இவ்வாறு கூறினார்.

 

MUST READ