Homeசெய்திகள்தமிழ்நாடுவக்பு வாரிய சட்டமசோதா - நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் ஆட்சேபனை தெரிவித்த திருமாவளவன்

வக்பு வாரிய சட்டமசோதா – நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் ஆட்சேபனை தெரிவித்த திருமாவளவன்

-

 வக்பு வாரிய சட்டமசோதா - நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் ஆட்சேபனை தெரிவித்த திருமாவளவன்மத்திய அரசின் வக்பு வாரிய சட்டமசோதா குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் விசிக தலைவர் திருமாவளவன் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் இந்த வக்பு வாரிய சட்டமசோதா சிறுபான்மை மக்களுக்கான உரிமைகளை பறிப்பதாக அமைந்துள்ளது என நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் தெரிவித்துள்ளார்.

பாஜக அரசு அறிமுகப்படுத்தியுள்ள வக்பு வாரிய சட்ட மசோதா தற்போது நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வில் இருக்கிறது. அந்த மசோதாவை நிறைவேற்றக்கூடாது என டெல்லியில் நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் விசிக சார்பில் ஆட்சேபனை மனுவை நேற்று தந்துள்ளார்.

அந்த ஆட்சேபனை மனுவில் அவர் கூறிப்பிட்டுள்ளது,” வக்பு நிறுவனங்கள் குறித்த விளக்கத்தில் சர்ச்சைக்குரிய மாற்றங்களை இந்த மசோதா செய்துள்ளது. வக்பு வாரியத்தின் அமைப்பு முத்தவல்லியின் கடமைகள் ஆகியவற்றிலும் மாற்றங்களைச் செய்துள்ளது. இது அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 26-ல் சிறுபான்மை சமூகத்தினருக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது.

வக்பு வாரியங்களை நிர்வகிப்பதில் முஸ்லிம் அல்லாதவர்களை அதிகம் நியமிக்க வழி வகுக்கிறது எனவும் வக்பு வாரிய நிர்வாகத்தில் அரசின் தலையீட்டை அதிகரிக்கிறது. வக்பு வாரிய அதிகாரங்களைக் குறைக்கும் விதமாக உள்ளது. வக்பு வாரிய கவுன்சிலில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களை நியமித்து அதன் பண்பை மாற்றும் முயற்சி.

இப்படி எல்லாம் கேள்வி கேட்கக் கூடாது – நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆவேச பேச்சு

வக்பு வாரிய சொத்துக்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்துவதோடு முஸ்லிம்களில் உள்ள போரா, ஆகாகனி என வெவ்வேறு பிரிவினருக்கு தனித்தனி வக்பு வாரியங்களை உருவாக்க அனுமதிப்பதன் மூலம் முஸ்லிம்களைக் கூறுபடுத்துகிறது ஆகிய காரணங்களால் வக்பு திருத்த சட்டமசோதாவை விசிக எதிர்க்கிறது என திருமாவளவன் அதில் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ