Homeசெய்திகள்தமிழ்நாடுபெரியாரை விமர்சிப்பவர்களை இனியும் வேடிக்கை பார்க்க முடியாது - திருமாவளவன் காட்டம்!

பெரியாரை விமர்சிப்பவர்களை இனியும் வேடிக்கை பார்க்க முடியாது – திருமாவளவன் காட்டம்!

-

- Advertisement -

தந்தை பெரியாரைப் பற்றி கொச்சையாக விமர்சனம் செய்பவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி வேடிக்கை பார்க்காது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பெரியார் மீது அவதூறு பரப்புவது தமிழ் இனத்திற்கும் செய்யும் துரோகம் - தொல். திருமாவளவன் பேச்சு

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டு பகுதியில் மறைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர் மகேந்திரன் புகைப்படத்தை, கட்சியின் தலைவர் திருமாவளவன் திறந்துவைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய  திருமாவளவன் பேசியதாவது:- இன்றைக்கு தந்தை பெரியாரைப் பற்றி கொச்சையாக விமர்சனம் செய்பவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் முளைத்து விட்டார்கள். அவர்களை பின்னிருந்து இயக்கக் கூடியவர்கள் யார்? என்பதும், அவர்கள் மூலமாகவே அம்பலமாகியுள்ளது. பெரியார் இயக்கம் தொடங்கிய காலம்தொட்டு அவரை யார் வீழ்த்த வேண்டும் என நினைத்தார்கள்? என்பதை நாடு அறியும். அந்த கும்பல் ஒவ்வொரு முறையும் தோற்றுப்போய் விழுந்தார்கள். ஆனால் பெரியாரை வீழ்த்த முடியவில்லை.

தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் ஈரோட்டில் பிரச்சாரம் செய்வதற்கு எதிர்ப்பு

பெரியார் திமுக, அதிமுக கட்சிகளுக்கு மட்டும் உரித்தானவர் அல்ல. விடுதலை சிறுத்தைகளுக்கும் பெரியார் தான் வழிகாட்டி. கொள்கையாசான். பெரியாரை விமர்சிக்கட்டும் என வேடிக்கை பார்க்க முடியாது. பெரியாரையே அன்னியர் என சொல்பவர்கள் அம்பேத்கரை அன்னியர் என சொல்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும். பெரியார் தமிழர் இல்லை தமிழ் தேசத்தின் பகைவர் என்று சிலர் உளறிக் கொண்டிருக்கிறார்கள். அதனை நாம் அனுமதித்தால் அம்பேத்கரை மராட்டியர் என சொல்லி அந்நியப்படுத்துவார்கள். இது அரைவேக்கட்டுத்தனமான அரசியல். அற்பத்தனமான அரசியல். இனவாத அரசியலை உயர்த்திப் பிடிக்கும் ஒரு முயற்சி.  திமுக, அதிமுக போன்ற கட்சிகள் ஆளும் கட்சியாக, ஆண்ட கட்சியாக இருந்ததால் நாம் இறங்கிப்போய் பதில் சொல்ல தேவையில்லை என அமைதி காக்கலாம். ஆனால் அப்படி விடுதலை சிறுத்தைகள் வேடிக்கை பார்க்க முடியாது. நம்முடைய கொள்கை அடையாளங்களை சிதைக்கும் முயற்சியை அனுமதிக்க முடியாது. தமிழ்நாட்டை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையும் பாதுகாத்தாக வேண்டும்.

7 மாநில இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு

மூன்றாவது முறையாக மோடி ஆட்சிக்கு வந்தது இந்த நாட்டிற்கு கேடு.மோடியை எப்படியாவது இந்த தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்று பெரும் முயற்சி மேற்கொண்டோம். அகில இந்திய அளவில் 28 கட்சிகளை ஒன்றிணைத்து இந்திய கூட்டணி என ஒருங்கிணைத்தோம். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கும் பங்கு உண்டு. ஆனாலும் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்து விட்டது. அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான சதி முயற்சிகளை தொடர்ந்து பாஜக ஈடுபட்டு வருகிறது. அரசமைப்புச் சட்டத்தை நாளுக்கு நாள் நீர்த்துப் போக செய்கிற வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

சிறுபான்மையினருக்கான தனி சட்டத்தை சீர்குலைக்க வக்பு வாரியத்தை ஆக்கிரமிக்க புதிதாக ஒரு சட்டத்தை அடாவடித்தனமாக கொண்டு வருகிறார்கள். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிராக மட்டுமல்ல இந்துக்களுக்கு எதிராகவும் செயல்படக் கூடிய ஒரு அரசு பாஜக அரசு, மோடி அரசு. இதனை இந்துக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொள்ளவும் பாஜகவுக்கு பாடப் புகட்டவும் திமுக தலைமையிலான இந்த கூட்டணி வலுவாக இருக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த கூட்டணியை சிதறடிக்க என்னென்னவோ முயற்சிகள் எல்லாம் மேற்கொண்டார்கள். அந்த சதிகளை எல்லாம் முறியடித்த இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ