TN – RISE எனும் தமிழக ஊரக தொழில் காப்பு, புத்தொழில் உருவாக்க நிறுவனத்தை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் மகளிரின் பொருளாதார சுதந்திரத்துக்கான திட்டங்களை பார்த்துப் பார்த்து செயல்படுத்தி வரும் நம் திராவிட மாடல் அரசின் அடுத்தகட்ட முன்னெடுப்பாக, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் TN – RISE ( Tamil Nadu Rural Incubator and Start – up Enabler) தமிழ்நாடு ஊரக தொழில் காப்பு மற்றும் புத்தொழில் உருவாக்கு நிறுவனத்தை சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டிலிருந்து அதிகளவிலான மகளிரை தொழில்முனைவோர்களாகவும் – தொழிலதிபர்களாகவும் உருவாக்கிட வேண்டும் எனும் மாபெரும் இலக்கோடு தொடங்கப்பட்டுள்ள இந்நிறுவனம், தொழில் தொடங்க விரும்பும் மகளிருக்கு பல்வேறு வழிகாட்டுதல்களையும் – உதவிகளையும் வழங்கவுள்ளது. ஆண் தொழில் முனைவோர்களுக்கு இணையாக மகளிர் தொடங்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை மேம்படுத்தும் வகையில், “வாழ்ந்து காட்டுவோம்” என்ற திட்டத்தின் கீழ் புதிய நிறுவனமொன்றையும் தமிழக அரசு சார்பில் தொடங்கிவைத்தார்.
குறிப்பாக ஊரக பகுதிகளில் இருந்து மகளிர் தொழில் முனைவோரை உருவாக்க அனைத்து வகையிலும் TN- RISE துணை நிற்கும். உலக வங்கியின் உதவியோடும் – தனியார் நிறுவனங்களின் பங்களிப்போடும் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படவுள்ள TN-RISE, மகளிருக்கு தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகளை வழங்குவது, நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்துவது, நிதி மேலாண்மை – சந்தை நிலவரம் குறித்த புரிதலை ஏற்படுத்துவது என்று பல்வேறு தளங்களில் இயங்கவுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
இந்நிகழ்வின் போது, TN-RISE-ன் லோகோ மற்றும் இணையதளத்தையும் தொடங்கி வைத்த அவர், கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்கு திமுக அரசு பாடுபடும் என்றார்.