Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு!

-

- Advertisement -

இன்று முதல் HUID நகைகளை மட்டுமே விற்க அனுமதி!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.53,440-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச பொருளாதார நிலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களாக தினமும் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.53,040-க்கு விற்பனையானது. நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரனு ரூ.53,160-க்கு விற்பனையானது.

சென்னை விமான நிலையத்தில் ரூ. 2.08 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.53,440-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து, ஒரு கிராம் ரூ.6,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை உயர்ந்ததை தொடர்ந்து வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.80 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.95.80-க்கும் பார் வெள்ளி ரூ.95,800-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

MUST READ