Homeசெய்திகள்தமிழ்நாடுமீண்டும் அதிகரித்தது தங்கம் விலை- இல்லத்தரசிகள் கவலை

மீண்டும் அதிகரித்தது தங்கம் விலை- இல்லத்தரசிகள் கவலை

-

- Advertisement -

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் 49,080க்கு விற்பனை செய்யப்படுகிறது

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த 7ஆம் தேதி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்தது. இதன் மூலம் ஒரு கிராம் ரூ.6,090க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.48,720க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 9 ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் 48,840 ரூபாய்க்கு விற்பனையானது.

இதனைத்தொடர்ந்து கடந்த 10 மற்றும் 12ஆம் தேதி வரையில் தங்கம் விலையில் எந்த மாற்றமுமின்றி கிராமுக்கு ரூ.6150க்கும் மற்றும் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.49,200க்கும் விற்பனையானது. இந்தநிலையில் நேற்று தங்கம் விலையானது அதிரடியாக குறைந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.40 குறைந்து ரூ.6110க்கும், ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.320 குறைந்து ரூ.48,880க்கும் விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ25 உயர்ந்து, 6,135க்கும், ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ200 உயர்ந்து ரூ49,080க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலையானது ஒரு சவரன் தங்கத்தின் விலை 50 ஆயிரம் ரூபாயை நெருங்குவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்..

MUST READ