டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து
டி.டி.எஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய விவகாரத்தில் டி.டி.எஃப் வாசன் கைதாகி புழல் சிறையில் உள்ளார். யூடியூபர் டி.டி.எஃப் வாசனுக்கு ஜாமின் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
இந்நிலையில் டி.டி.எஃப் வாசன் மீது பல்வேறு பகுதிகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ. உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, டி.டி.எஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 2033ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிவேகமாக வாகனங்களை ஓட்டி, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவதால் ஓட்டுநர் ஒரிமம் ரத்து செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் அவட்டாரப் போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார்.