Homeசெய்திகள்தமிழ்நாடுநீட் என்னும் மோசடி தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் திராவிட முன்னேற்றக் கழகம் ஓயாது - உதயநிதி...

நீட் என்னும் மோசடி தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் திராவிட முன்னேற்றக் கழகம் ஓயாது – உதயநிதி ஸ்டாலின்!

-

நீட் என்னும் மோசடி தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் திராவிட முன்னேற்றக் கழகம் ஓயாது என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் சமூகநீதிக்கும் அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்கும் மாநில உரிமைகளுக்கும் எதிரான நீட் என்னும் மோசடித் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் கழகத்தலைவர் @mkstalin தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் ஓயாது.

இது குறித்து குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், சமீபத்திய நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் அத்தேர்வுக்கு எதிரான நமது கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன. வினாத்தாள் கசிவுகள், குறிப்பிட்ட மையங்களில் இருந்து மொத்தமாக அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், கருணை மதிப்பெண்கள் என்ற போர்வையில் நடைமுறைக்குச் சாத்தியமற்ற அளவில் மதிப்பெண்களை அள்ளி வழங்குவது போன்ற குழப்பங்கள் தற்போதைய ஒன்றிய அரசின் அதிகாரக்குவிப்பின் குறைபாடுகளை வெட்டவெளிச்சமாக்குகின்றன.

"பா.ஜ.க.வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை!

இவை, தொழிற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகள் மற்றும் பள்ளிக் கல்வி முறை மீண்டும் முதன்மை பெற வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன.மீண்டும் ஒருமுறை அழுத்தந்திருத்தமாகச் சொல்கிறோம்: நீட் மற்றும் பிற தேசிய நுழைவுத் தேர்வுகள் ஏழை மாணவர்களுக்கு எதிரானவை. அவை கூட்டாட்சியியலை சிறுமைப்படுத்துபவை. சமூகநீதிக்கு எதிரானவை. தேவையுள்ள இடங்களில் மருத்துவர்களின் இருப்பை பாதிப்பவை. #NEET எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம்கோப்போம்! நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை! எனக் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

MUST READ