விஜய் குறித்து அவதூறு- பாஜக நிர்வாகி மீண்டும் கைது
நடிகர் விஜய் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக பாஜக ஆதரவாளர் உமா கார்த்திகேயன் கோவையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை, சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ஃந்தவர் உமா கார்த்திகேயன் (56). பாஜகவின் சமூக வலைதள செயல்பாட்டாளரான இவர், சமூக வலைதளங்களில் பாஜக மற்றும் பிரதமர் மோடி தொடா்பாக ஆதரவு கருத்துகளையும், திமுக, பெரியார் ஈ.வெ.ரா., மணியம்மை, நடிகர் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடா்பான சா்ச்சைக்குரிய கருத்துகளையும் பதிவிட்டு வந்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து உமா கார்த்திகேயன் தொடர்ந்து அவதூறு கருத்துகளைப் பரப்பி வருவதாக, கோவை சைபர் கிரைம் காவல் துறையில் கோவை வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு அமைப்பாளர் ஹரீஷ் திங்கள்கிழமை புகார் அளித்தார். இதன் பேரில் சைபர் கிரைம் காவல் துறையினர், தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல், இரு மதத்தினரிடையே மோதல் ஏற்படுத்த முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து உமா கார்த்திகேயனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
திமுகவினர் அளித்திருந்த புகாரின் அடிப்படையில் உமா கார்த்திகேயன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நடிகர் விஜய் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக விஜய் மக்கள் இயக்கத்தினர் சென்னையில் புகார் அளித்திருந்தனர். கோவையில் சிறையில் உமா கார்த்திகேயன் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் துறையினர் கோவை சிறையிலிருந்து சென்னைக்கு அழைத்து சென்றனர்.