தீபாவளிப் பண்டிகையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக முன்கூட்டியே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தீபாவளி அக்.31-ம் தேதி வருவதையொட்டி இதற்கான ரயில் முன்பதிவு கடந்த ஜூலை மாதம் தொடங்கி ஒருசில நிமிடங்களிலேயே முடிந்தது. இதனால் சிறப்பு ரயில் அறிவிப்புக்காக லட்சக்கணக்கானோர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
டாக்டர் படிப்பை கைவிட்டால் ரூ.10 லட்சம் அபராதம்! மருத்துவக்கல்வி இயக்குநரகம் அறிவிப்பு
வழக்கம் போல கடைசி நேரத்தில் அறிவிக்காமல், ஒரு மாதத்திற்கு முன்பாகவே சிறப்பு ரயில்கள் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.