Homeசெய்திகள்தமிழ்நாடுஆங்கில பாட வினாத்தாளில் குழப்பம் - எஸ்.எஸ்.எல்.சி மாணவர்கள் தவிப்பு..

ஆங்கில பாட வினாத்தாளில் குழப்பம் – எஸ்.எஸ்.எல்.சி மாணவர்கள் தவிப்பு..

-

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கில பாடத்தில் சில கேள்விகளில் குழப்பம் இருந்ததாகவும், அந்த வினாக்களுக்கு உரிய மதிப்பெண் வழங்கவேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 6-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொழிப்பாடத் தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில், கடந்த 8ம் தேதி ஆங்கில பாட தேர்வு நடைபெற்றது. இந்த ஆங்கில தேர்வு வினாத்தாளில் சில கேள்விகள் தவறாக இருந்ததால், மாணவர்கள் குழப்பமடைந்ததாக கூறப்படுகிறது. அதாவது, 1 முதல் 6 வரையிலான கேள்விகளில் தலா 3 அருஞ்சொற்பொருள் அறிக, எதிர்ச்சொல் அறிக என்பதற்கு பதிலாக 6 கேள்விகளையும் அருஞ்சொற்பொருள் அறிக என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள் அவதி அடைந்ததாகவும், அதற்கு உரிய மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆங்கில பாட வினாத்தாளில் குழப்பம் - எஸ்.எஸ்.எல்.சி மாணவர்கள் தவிப்பு..

இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக திருச்சி மாவட்ட செயலாளர் வே.குமார் விடுத்துள்ள அறிக்கையில், “ ஏப்ரல் 8 அன்று நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் ஆங்கில தேர்வுக்கான வினாத்தாளில் எதிர்ச்சொல் பிரிவில் வினா எண் 4, 5, 6 ஆகியவற்றுக்கு உரிய தலைப்பு வழங்கப்படவில்லை. மேலும் வினா எண்:28-ல் சாலை வரைபடத்தில் வழி அடைக்கப்பட்டுள்ளது. இது மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தவறான வினாக்களுக்கு உரிய மதிப்பெண்களை வழங்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

 

 

MUST READ